×

ராஜகோபாலனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்: நடிகர் ஆரி கருத்து

சென்னை: சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், அவரை கண்டும் காணாமல் இருந்த பள்ளி நிர்வாகத்துக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆரி அர்ஜுனா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆசிரியர் போர்வையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோர் மீது சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை, இதுபோன்றோருக்கு பாடமாக இருக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்….

The post ராஜகோபாலனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்: நடிகர் ஆரி கருத்து appeared first on Dinakaran.

Tags : Rajagopalan ,Ari Chennai ,Chennai ,KK Nagar Padma Seshatri School ,Aari ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...